தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், நாளை தீபாவளி அன்று நடிகர் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்சல்' திரைப்படம் வெளியாகிறது. இத்திரைப்படத்தை முதல் நாள் பார்ப்பதற்காக திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் இன்று முதலே குவிந்து வருகிறது.

"அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இரண்டவாது படம் இது என்பதாலும், மூன்று கதாப்பாத்திரத்தில் விஜய் நடித்துள்ளதாலும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
மேலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி பலரின் கைபேசி அழைப்புப் பாட்டாகவும் ஒலித்து வருகிறது.

மேலும், முழு படம் வெளிவருவதற்கு முன்பே மெர்சல் படத்தின் டீசர் பல கோடி மக்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. அதேபோல் படமும் பெரும் சாதனைப் படைக்கும்" என்றார் திரையரங்கு வாசலில் டிக்கெட்டுக்காக அலைமோதிக்கொண்டிருந்த விஷ்ணு.
இதனிடையே, கோவை நகரின் பிரதான திரையரங்குகளில் மட்டுமே வியாழக்கிழமை காட்சிகளுக்கான டிக்கெட் விநியோகிக்கப்படுவதால், நாளை இப்படம் திரைக்கு வருமா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய ரசிகர் நவீன் கூறியதாவது:-

"சமீபகாலமாக நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் திரையிடுவதற்கு ஒருசில நேரத்திற்கு முன்பு தற்காலிக தடை பெற்று பின் திரைக்கு வருவது வழக்கமாகியுள்ளது. மெர்சல் திரைப்படமும் தற்போது பல சிக்கலை சந்தித்த நிலையில், நாளை வெளிவரும் என்று எதிர்பாக்கிறோம். ஆனால் நாளை மறுநாளுக்கான டிக்கெட் மட்டுமே திரையரங்குகளில் விநியோகிக்கப்படுகிறது. இது குறித்து திரையரங்க உரிமையாளர்களும் முறையாக பதிலளிக்க மறுக்கின்றனர்" என்று புகாரளித்தார்.
இதைப்பற்றி திரையரங்க உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது, "நாளை மறுநாளுக்கான டிக்கெட்டுகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டதால் தான் தற்பொழுது டிக்கெட் கொடுத்து வருகிறோம். விரைவில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட் கொடுக்கப்படும். ரசிகர்கள் சந்தோஷமாக படத்தைப் பார்ப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திரையரங்க உரிமையாளர்களிடம் நிலவும் இந்த குழப்பத்தால், மெர்சல் மட்டுமின்றி நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்ட சென்னையில் ஒரு நாள் 2, அறம், பொட்டு, மேயாத மான் மற்றும் கொடி வீரன் போன்ற படங்களின் வெளியீடும் பெரும் குழப்பத்தில் உள்ளது.

"அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இரண்டவாது படம் இது என்பதாலும், மூன்று கதாப்பாத்திரத்தில் விஜய் நடித்துள்ளதாலும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
மேலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி பலரின் கைபேசி அழைப்புப் பாட்டாகவும் ஒலித்து வருகிறது.

மேலும், முழு படம் வெளிவருவதற்கு முன்பே மெர்சல் படத்தின் டீசர் பல கோடி மக்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. அதேபோல் படமும் பெரும் சாதனைப் படைக்கும்" என்றார் திரையரங்கு வாசலில் டிக்கெட்டுக்காக அலைமோதிக்கொண்டிருந்த விஷ்ணு.
இதனிடையே, கோவை நகரின் பிரதான திரையரங்குகளில் மட்டுமே வியாழக்கிழமை காட்சிகளுக்கான டிக்கெட் விநியோகிக்கப்படுவதால், நாளை இப்படம் திரைக்கு வருமா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய ரசிகர் நவீன் கூறியதாவது:-

"சமீபகாலமாக நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் திரையிடுவதற்கு ஒருசில நேரத்திற்கு முன்பு தற்காலிக தடை பெற்று பின் திரைக்கு வருவது வழக்கமாகியுள்ளது. மெர்சல் திரைப்படமும் தற்போது பல சிக்கலை சந்தித்த நிலையில், நாளை வெளிவரும் என்று எதிர்பாக்கிறோம். ஆனால் நாளை மறுநாளுக்கான டிக்கெட் மட்டுமே திரையரங்குகளில் விநியோகிக்கப்படுகிறது. இது குறித்து திரையரங்க உரிமையாளர்களும் முறையாக பதிலளிக்க மறுக்கின்றனர்" என்று புகாரளித்தார்.
இதைப்பற்றி திரையரங்க உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது, "நாளை மறுநாளுக்கான டிக்கெட்டுகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டதால் தான் தற்பொழுது டிக்கெட் கொடுத்து வருகிறோம். விரைவில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட் கொடுக்கப்படும். ரசிகர்கள் சந்தோஷமாக படத்தைப் பார்ப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திரையரங்க உரிமையாளர்களிடம் நிலவும் இந்த குழப்பத்தால், மெர்சல் மட்டுமின்றி நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்ட சென்னையில் ஒரு நாள் 2, அறம், பொட்டு, மேயாத மான் மற்றும் கொடி வீரன் போன்ற படங்களின் வெளியீடும் பெரும் குழப்பத்தில் உள்ளது.